141. அருள்மிகு திருப்பயற்றீஸ்வரர் கோயில்
இறைவன் திருப்பயற்றீஸ்வரர்
இறைவி காவியங்கண்ணியம்மை
தீர்த்தம் கருணா தீர்த்தம்
தல விருட்சம் சிலந்தி மரம்
பதிகம் திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருப்பயற்றூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருப்பயத்தங்குடி' என்று அழைக்கப்படுகிறது. திருவாரூரில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் கங்களாச்சேரி சென்று அங்கிருந்து கைகாட்டி வலதுபுறம் திரும்பிச் சென்று கைகாட்டி பார்த்து இடதுபுறம் திரும்பி சென்றால் கோயிலை அடையலாம். மொத்தம் 15 கி. மீ. தெலைவு. திருவிற்குடியிலிருந்து 5 கி.மீ. பேருந்து வசதிகள் குறைவு. பிற வாகனங்களில் செல்வது சிறந்தது.
தலச்சிறப்பு

Thirupayatrur Gopuramவணிகன் ஒருவனுக்காக சிவபெருமான் மிளகுப் பொதிகளை பயறுப் பொதிகளாக மாற்றியருளிய தலம். அதனால் 'திருப்பயற்றூர்' என்னும் பெயர் பெற்றது. தற்காலத்தில் மருவி 'திருப்பயத்தங்குடி' என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் 'திருப்பயற்றீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'காவியங்கண்ணியம்மை' என்னும் திருநாமத்துடன் சிறிய வடிவில் காட்சித் தருகின்றார்.

Thirupayatrur AmmanThirupayatrur Moolavarபிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, பைரவர், சந்திரன் மற்றும் நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர். பைரவ முனிவர் வழிபட்ட தலம்.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com